பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ.
வரிகள்: வைரமுத்து.
இசை: A.R.ரஹ்மான்
ஆண்lபெண்
நறுமுகையே நறுமுகையே,
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா...
திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா..
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா...
மங்கை மான்விழி அம்புகள்
என் மார்துளைத்ததென்ன
மங்கை மான்விழி அம்புகள்
என் மார்துளைத்ததென்ன
பாண்டிநாடனைக் கண்டு என்
மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை
நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா..
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா...
யாயும் ஞாயும் யாராகியறோ நெஞ்சு
யாயும் ஞாயும் யாராகியறோ நெஞ்சு நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன..
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன...
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன
திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்றப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதறள நீர்வடிய கொற்றப்
பொய்கை ஆடியவள் நீயா
இப் பாடலில் வரும் சில செந்தமிழ்ச் சொற்களுக்கான இலகுதமிழ் விளக்கங்கள்
நறுமுகையே:- நறுமணம் மிக்க புதிய மொட்டு
நாழிகை:- 24 நிமிடம் கொண்ட ஒரு கால அளவு
அற்றை:- அந்த
திங்கள்:- மாதம்/நாள்
தரளம்:- முத்து
கொற்றப்பொய்கை:-அரண்மனை அந்தபுரத்தில் இருக்கும் குளம்
வெண்ணிறப் புரவி:- வெண்ணிறக் குதிரை
பசலை:- பெண்களுக்கே உரித்தான காதல் நோய்(இது வியாதி இல்லை)
இவ்வாறு பசலை ஏற்படுகையில் பெண்ணின் உடலின் நிறம்
மாற்றமடையும் என கூறப்படுகிறது..
(முக்கியகுறிப்பு:- இப்பலாம் பெண்களிடம் இதை
எதிர்பார்க்க வேண்டாம்,பேசியல் முகத்துக்குள் எங்கேன்னு
பசலையை தேடிக்கண்டுபிடிக்க..)
மேகலை:- ஒட்டியாணம்
யாய்:- தாய்