Tuesday, September 4, 2012

முகமூடி - திரை விமர்சனம்














நகரில் முகமூடி அணிந்து கொள்ளை,கொலையில் ஈடுபடும் மர்மக்கும்பலை பிடிக்க நாசருக்கு உதவுகிறார் ஹீரோ ஜீவா இதற்கு இடையில் காதல்,காமெடி,சண்டைகாட்சிகள் இதுதான் முகமூடி படத்தின் கதை. இதில் தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஜீரோ என்று சாரி ஹீரோ என்று பில்டப்பு வேற..
 சூப்பர் பவரே இல்லாத சூப்பர் ஹீரோவை காட்டியது மிஷ்கினின் சாதனை. ஹீரோவுக்கு குங்பூ தெரியுமாமாம்..
(எலேய் குங்பூ தெரிஞ்ச‌வனெல்லாம் சூப்பர் ஹீரோன்னா ப்ரூஸ் லீ சூப்பர் டூப்பர் ஹீரோவா..?) 
மிஷ்கின் படம் வருவதற்கு முதலே சூப்பர் ஹீரோ என்று உடான்ஸ் விட்டு கடைசியில் மொக்கையாகியது ஒருகதையாய் இருக்க,  படம் முழுக்க சூப்பர் ஹீரோவை தேடித்தேடி மண்டையை பிய்த்துக்கொண்டதுதான்... மேலும் படிக்க..

Sunday, September 2, 2012

வாய மூடி சும்மா இருடா - Vaaya Moodi Lyrics - Mugamoodi


பாடியவர்:- ஆலாப் ராஜூ
வரிகள்:- மதன் கார்க்கி
இசை:- கே


வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!

கடிகாரம் தலைகீழாய் ஓடும் - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!

பல நிலவொளிகளில்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில்
கனவுகள் இல்லை ஏதும்.
காணாமலே போனானடா!
ஏனென்று கேட்காதே போடா !

வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!
வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!

பார்வை ஒன்றில் காதல் கொண்டா,
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்?
பேரே இல்லா பூவைக் கண்டா,
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்?
என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?
நீ வாழவென்று என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?
ஓயாமலே பெய்கின்றதே
என் வானில் ஏனிந்தக் காதல்?

வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!
வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!

நாளை என் காலைக்கீற்றே நீ தானே!
கையில் தேநீரும் நீ தானடி!
வாசல் பூவோடு பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி!
கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?
கண் மூடிடும், அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!

வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!